கோவை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனை தொடங்கியது...!


கோவை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனை  தொடங்கியது...!
x
தினத்தந்தி 30 Nov 2021 10:25 AM GMT (Updated: 30 Nov 2021 10:25 AM GMT)

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தபின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது

கோயம்புத்தூர்,

ஒமிக்ரான் தொற்று அதிவேகமாகப் பரவும் தன்மைகொண்டது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் பரவும் தன்மை வேகமாக உள்ளதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பரிசோதனையானது சளி மாதிரிகளைச் சேகரித்து மேற்கொள்ளப்படுகிறது. கோயம்புத்தூர் விமான நிலையத்திலும் இந்தப் பரிசோதனையானது மேற்கொள்ளப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தபின் மாற்று விமானம் மூலம் கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தப் புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவின் அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கோயம்புத்தூர் விமான நிலையத்திலும், முன்னெச்சரிக்கையாக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இந்த ஒமைக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இப்பரிசோதனை செய்யப்படும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவு வரும்வரை அவர்கள் எங்கும் செல்லக்கூடாது என்றும் அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story