நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; 19 ஆம் தேதி கோயம்பேடு காய்கறி மார்கெட் விடுமுறை


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; 19 ஆம் தேதி கோயம்பேடு காய்கறி மார்கெட் விடுமுறை
x
தினத்தந்தி 15 Feb 2022 9:52 AM GMT (Updated: 15 Feb 2022 9:52 AM GMT)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வரும் 19 ஆம் தேதி கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியின தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு காய்கறி மார்கெட்டுக்கு வரும் 19 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. 

Next Story