குமரி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்


குமரி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 15 Feb 2022 10:15 AM GMT (Updated: 15 Feb 2022 10:15 AM GMT)

நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வரும் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Next Story