நீலகிரி: துர்கா பகவதியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு...!


நீலகிரி: துர்கா பகவதியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு...!
x
தினத்தந்தி 7 April 2022 10:00 AM GMT (Updated: 7 April 2022 9:51 AM GMT)

கூடலூரில் துர்கா பகவதி அம்மன் கோவில் விழாவில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் மாக்கமூலா துர்கா பகவதி அம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு பள்ளி எழுச்சியும், தொடர்ந்து கணபதி ஹோமமும், அம்மனுக்கு விசேஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பகல் 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இரவு 7 மணிக்கு விசேஷ அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து செண்டை மேளங்கள் முழங்க பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு கணபதி, சுதர்சன ஹோமங்களும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 9 மணிக்கு கோவில் முன்பு ஏராளமான பெண்கள் மண்பானைகளில் பொங்கலிட்டு வழிபட்டனர்.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் அர்ச்சகர் பொங்கல் பானை களுக்கு தீபாராதனை காண்பித்தார். அப்போது குலவையிட்டு பெண்கள் அம்மனை தரிசித்தனர். பின்னர் பகல் 12 மணிக்கு உச்சிகால மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு பெண்கள் அகல் விளக்குகள் ஏந்தியவாறு ஊர்வலமாக செல்ல அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் துர்க்கா பகவதி அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்ற உள்ளது. 



Next Story