பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: தென்கொரியா அரைஇறுதிக்கு தகுதி!


பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து: தென்கொரியா அரைஇறுதிக்கு தகுதி!
x
தினத்தந்தி 30 Jan 2022 4:22 PM GMT (Updated: 30 Jan 2022 4:23 PM GMT)

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்கொரியா.

புனே,

பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மராட்டியத்தில் 3 இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணியிலுள்ள 12 வீராங்கனைகளுக்கு கொரோனா ஏற்பட்டதால், இந்திய அணி  போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் 2023-ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் இந்திய அணியின் கனவு கலைந்தது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது  தென்கொரியா.

இதன்மூலம், 2023 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு  தென்கொரியா தகுதி பெற்றது.

Next Story