சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் 2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
Published on

குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும், உயர்வுக்கும் பெண் குழந்தைகள் காரணமாக இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதும், வாழ்வில் உயர்த்துவதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும் 2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ம் நாள், சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல், சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கான சம உரிமையை வழங்குதல், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுத்தல் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை முன்னிறுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.

பெண்களின் சம உரிமை மற்றும் முன்னேற்றத்திற்காக உலக அளவில் இன்றும் போராட்டங்களும், முயற்சிகளும் நடந்து வருகின்றன. பெண் குழந்தைகளுக்கு சம உரிமை அளிப்பதை குடும்பத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் அனைத்து விதங்களிலும் சமமாக நடத்த வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com