

பெங்களூரு,
எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. இந்த அரசில் லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண், கோவிந்த் கார்ஜோள் ஆகிய 3 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
துணை முதல்-மந்திரி பதவி கிடைக்காததால் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் தீவிர போராட்டம் நடத்தினர். இதனால் மேலும் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழங்குடியினத்தை சேர்ந்த மந்திரி ஸ்ரீராமுலு மற்றும் குருபா சமூகத்தை சேர்ந்த ஒருவர் என மேலும் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கினால் துணை முதல்-மந்திரிகளின் எண்ணிக்கை 5 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.