

அப்போது பக்கத்து அறையில் தங்கி இருந்த ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த பத்ரிஷ் (23) என்பவர் குடிபோதையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்த இவர்களிடம் தகராறு செய்தார். இருதரப்புக்கும் வாக்குவாதம் முற்றி
கைகலப்பானது. இருதரப்பினரும் மாறி, மாறி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து 5 பேரையும் விடுதி நிர்வாகம் வெளியேற்றியது. விடுதி வாசலில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கற்களால் இருதரப்பினரும் தாக்கிக்கொண்டனர்.
இதில் பாலாஜி உள்பட 4 பேரும் கல்லால் அடித்ததில் படுகாயம் அடைந்த பத்ரிஷ், பரிதாபமாக இறந்தார். பின்னர் 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலாஜி, இசக்கி, சுரேஷ்குமார், மோசஸ் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.