

நகைப்பட்டறை ஊழியரிடம் 106 பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு சென்ற வழக்கில் தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்து உள்ளது. அது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் டேனியல் (வயது 30). இவருடைய மனைவி சங்கீதா (23). டேனியல் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் மீன்கடை நடத்தி வந்தார். அதில் சரியான வருமானம் இல்லை. எனவே கடன் அதிகளவில் ஏற்பட்டது. அதை அவரால் அடைக்க முடியவில்லை.
இதற்கிடையே ராமமூர்த்தி வேலை செய்து வரும் நகைப்பட்டறையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்த பொன்னையராஜபுரத்தை சேர்ந்த பத்ரிநாதன் என்பவர் அறிமுகம் ஆனார். அவரிடம் நகையை கொள்ளையடிப்பது எப்படி என்று டேனியல் கேட்டார்.