அம்மாபேட்டை பகுதி ரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரண பொருட்கள் - அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

அம்மாபேட்டை பகுதி ரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.
அம்மாபேட்டை பகுதி ரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரண பொருட்கள் - அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்
Published on

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம், மூனாஞ்சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பணமும், பொருட்களும் வழங்கினார். பின்னர் கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் விரைவில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குமாறு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் எ.ஈஸ்வரமூர்த்தி, துணை தலைவர் பங்க் பாலு, நிலவள வங்கி தலைவர் யு.எஸ்.சுந்தரராசன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ராதா, அம்மாபேட்டை பேரூர் அ.தி.மு.க. செயலாளர் டி.செந்தில்குமார், ஊமாரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com