தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சென்னை வடக்கு மண்டல கமிஷனராக அமுதா பொறுப்பு ஏற்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சென்னை வடக்கு மண்டல கமிஷனராக அமுதா பொறுப்பு ஏற்பு.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சென்னை வடக்கு மண்டல கமிஷனராக அமுதா பொறுப்பு ஏற்பு
Published on

சென்னை,

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சென்னை வடக்கு மண்டல அலுவலக கிரேடு-1 மண்டல கமிஷனராக சி.அமுதா நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவர் வருங்கால வைப்புநிதி உதவி கமிஷனராக கடந்த 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். கோவை, தாம்பரம், சேலம் மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

சென்னை வடக்கு மண்டல அலுவலக கிரேடு-1 மண்டல கமிஷனராக பொறுப்பு ஏற்றதற்கு முன்னதாக, பெங்களூரு மண்டல அலுவலக கிரேடு-1 அதிகாரியாக அமுதா பணியாற்றினார். சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் கமிஷனர்-2 பிரனித் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com