

பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. கூட்டணி ஆட்சியின் முதல் பட்ஜெட்டை அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்ய உள்ளார்.
முன்னதாக 2-ந் தேதி கர்நாடக சட்டசபை கூட்டுக்கூட்டம் தொடங்குகிறது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தொடர் 12-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும்.
இதையொட்டி, விதானசவுதாவை சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 6 மணியில் இருந்து 6-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அந்த நாட்களில் விதானசவுதாவை சுற்றி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.