

திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் ஏரி, குளங்களை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர்.