

பழனி,
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பஸ்களிலேயே வருகின்றனர். பயணிகளின் வருகை, பயன்பாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ்நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் பழனி பஸ்நிலையத்தின் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வாகன நிறுத்தமாக மாறி வருகிறது.