திருவள்ளூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளும் தூய்மை ஆஸ்பத்திரியாக மாற்றும் நோக்கத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பல்வேறு செயல்பாடுகள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி
Published on

திருவள்ளூர்

இதைத்தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூரில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்து தானும் அவர்களுடன் பேரணியாக சென்றார். அவருடன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், அரசு ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அலுவலர் ராஜ்குமார், புற்றுநோய் நுண்கதிர் சிறப்பு மருத்துவர் கோபிகா, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயராஜ், குழந்தை நல மருத்துவர் பிரபுசங்கர், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் அரசு அலுவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com