மதுபான பாரில் ஆபாச நடவடிக்கை: 15 பெண்கள் மீட்பு

மும்பை முல்லுண்டு மேற்கு, எல்.பி.எஸ். ரோட்டில் உள்ள ஒரு மதுபான பாரில் சம்பவத்தன்று இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுபான பாரில் ஆபாச நடவடிக்கை: 15 பெண்கள் மீட்பு
Published on

மும்பை,

மும்பை முல்லுண்டு மேற்கு, எல்.பி.எஸ். ரோட்டில் உள்ள ஒரு மதுபான பாரில் சம்பவத்தன்று இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அந்த பாரில் விதிமுறையை மீறி பெண் ஊழியர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் அவர்கள் அரை குறை ஆடைகளுடன் ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இதையடுத்து போலீசார் பாரில் இருந்த 15 பெண்களை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மதுபான பாரின் உரிமையாளர் பரத் தாக்குர், காசாளர் வெங்கடேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com