மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு

சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 19). இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் சாவு
Published on

இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான விக்னேஷ் (23) என்பவருடன் ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள நீர்விழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் உள்ள சிமெண்டு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com