கடலூர்-விழுப்புரம் மாவட்டங்களில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணம் - அ.தி.மு.க.-கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று(புதன்கிழமை) சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
கடலூர்-விழுப்புரம் மாவட்டங்களில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சுற்றுப்பயணம் - அ.தி.மு.க.-கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்
Published on

கடலூர்,

தமிழகத்தில் அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று(புதன்கிழமை) கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அவரது சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

இன்று(புதன்கிழமை) காலை 9 மணி முதல் 9-30 மணி வரை சங்கராபுரத்திலும், காலை 10 மணி முதல் 10-30 மணி வரை கள்ளக்குறிச்சியிலும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

பின்னர் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து உளுந்தூர்பேட்டையில் காலை 11-30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், விழுப்புரத்தில் மாலை 4 மணி முதல் 4-30 மணி வரையும் பிரசாரம் செய்கிறார்.

பின்னர் அவர் கடலூர் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை ஆதரித்து, கடலூர் ரெட்டிச்சாவடியில் இன்று மாலை 6-20 மணி முதல் 6-40 மணி வரையும், கடலூர் உழவர்சந்தையில் இரவு 7 மணி முதல் 7-20 மணி வரையும், பரங்கிப்பேட்டையில் இரவு 8 மணி முதல் 8-30 மணி வரையும் பிரசாரம் செய்கிறார்.

இதன் பிறகு சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து புவனகிரியில் இரவு 8-45 மணி முதல் 9 மணி வரையும், சிதம்பரத்தில் இரவு 9-15 மணி முதல் 9-30 மணி வரையும் பிரசாரம் செய்கிறார்.

இதன்பிறகு வைத்தீஸ்வரன் கோவிலில் இரவு தங்கிவிட்டு நாளை(வியாழக்கிழமை) செம்பனார்கோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கி குத்தாலம், பேரளம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டி விட்டு திருச்சியில் இரவில் தங்குகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com