டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு காரைக்கால் கலெக்டர் தொடங்கி வைத்தார்

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தனியார் நிறுவன உதவியுடன் டிரோன் மூலம் காரைக்கால் பகுதியில் கிருமிநாசினி தெளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு காரைக்கால் கலெக்டர் தொடங்கி வைத்தார்
Published on

காரைக்கால்,

இதை மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே, டிரோன் மூலம் கிருமிநாசினி தெளித்து பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி, நகராட்சி வளாகம் மற்றும் கொரோனா பாதித்து நோயாளிகள் வீட்டு தனிமையில் இருக்கும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதில், மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com