

மைசூரு,
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் திடீரென மைசூருவுக்கு குடும்பத்துடன் வந்தார். பின்னர் அவர் மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். நேற்று சித்தராமையாவின் மூத்த மகனான ராகேசின் 3-ம் ஆண்டு நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்பேரில் சித்தராமையா மூத்த மகன் ராகேசுக்கு நினைவஞ்சலி செலுத்தினார். பின்னர் மைசூரு தாலுகா ஹரி காட்டூர் கிராமத்தில் உள்ள சித்தராமையாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ராகேசுக்கு புண்ணிய திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்குதான் ராகேசின் சமாதி உள்ளது குறிப்பிடத்தக்கது. புண்ணிய திதி கொடுக்கும் நிகழ்ச்சியில் சித்தராமையாவும், அவருடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். பின்னர் ராகேசின் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அவர் தனது வீட்டில் இருந்து புறப்படும்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-