

படப்பை,
சென்னை செங்குன்றம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 25). கிளிஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி நித்தியலட்சுமி என்ற கருத்தம்மா (23). சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கார்த்திக் (4) என்ற மகன் உள்ளான்.
திருமணமான நாள் முதல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. செங்குன்றம் பகுதியில் வசித்து வந்த இருவரும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி பகுதியில் உள்ள அண்ணா நகர் இரண்டாவது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.