பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக அரசு பள்ளி மாணவிகளுக்கு துணிப்பை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ஏற்படும் கெடுதல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தலின் பேரில் நேற்று அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.