பள்ளி மாணவர்களுக்கு கல்வி யூடியூப் சேனல் மாநில அரசு தொடங்கியது

மராட்டியத்தில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி யூடியூப் சேனல்களை மாநில அரசு தொடங்கி உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி யூடியூப் சேனல் மாநில அரசு தொடங்கியது
Published on

மும்பை,

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் அந்த வைரஸ் பரவல் காரணமாக 2020-21 கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்குவதற்கு பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த மாநில அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தையும் நிர்ணயித்து உள்ளது.

இந்த நிலையில், மராத்தி மற்றும் உருது மீடியத்தில் படிக்கும் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயன் பெறும் வகையில் மராட்டிய மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எம்.எஸ்.சி.இ.ஆர்.டி.) 4 கல்வி யூடியூப் சேனல்களை (SCERT-MH) தொடங்கியுள்ளது.

இதன்படி மராத்தி மற்றும் உருது மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை இரண்டு சேனல்களும், 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 யூடியூப் சேனல்களும் தொடங்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் துணை இயக்குனர் விகாஸ் காரட் கூறுகையில், அடுத்த சில நாட்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மீடியம் மாணவர்களுக்கான யூடியூப் சேனல் தொடங்கப்படும். 12-ம் வகுப்பு அறிவியல் மற்றும் கலை பிரிவு மாணவர்களுக்காக தனியாக யூடியூப் சேனல் தொடங்கப்படும். இந்த அனைத்து சேனல்களில் உள்ள கல்வி வீடியோக்களில் எந்த விளம்பரங்களும் இடம் பெறாது. இந்த சேனல்கள் அனைத்தும் இலவசம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com