போலி இன்சூரன்ஸ் ஆவணம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்செந்தூரை சேர்ந்த ஒருவர் கோவை உக்கடம் லாரிப்பேட்டை அருகே சென்ற போது, பைக் மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்தார்.
போலி இன்சூரன்ஸ் ஆவணம் தயாரித்து மோசடி: 2 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 44) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவை உக்கடம் லாரிப்பேட்டை அருகே சென்ற போது, பைக் மீது லாரி மோதிய விபத்தில் காயமடைந்தார்.

இதுதொடர்பாக விபத்து ஏற்படுத்திய லாரி உரிமையாளர், இன்சூரன்ஸ் மூலம் பிரகாஷ் தரப்பினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனாலும் கோர்ட்டு உத்ரவுக்குப் பிறகும் அவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

இதில் விபத்து ஏற்படுத்திய லாரி உரிமையாளர் மகேஸ்வரன், டிரைவர் தென்னரசு உள்ளிட்டவர்கள் போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றியதாக போலீசார் மேற்சொன்ன 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com