

படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2017-2018 மற்றும் 2018-2019 கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி இதுவரை வழங்கப்படவில்லை. இவர்கள் தற்போது கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது 2019-2020 கல்வி ஆண்டு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.