சேலம் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் நல்லக்கண்ணு பேட்டி

சேலம் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று நல்லக்கண்ணு கூறினார்.
சேலம் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் நல்லக்கண்ணு பேட்டி
Published on

தஞ்சாவூர்,

சேலம் 8 வழிச்சாலை சரியல்ல. அதற்கான எந்தவித அதிகாரமும் இன்றி விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இது சட்டத்திற்கு புறம்பானது என்றும், அந்த நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என்று ஒரு அமைச்சரும், பரிசீலனை செய்யப்படும் என்று மற்றொரு அமைச்சரும் கூறியிருக்கின்றனர். ஆனால் இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பி கொடுப்பதோடு, உரிய இழப்பீடும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

நல்ல தீர்ப்பு

மது விற்பனை மூலம் ரூ.31 ஆயிரத்து 742 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் 47 சதவீத ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். மது காரணமாக பாலியல், வன்முறை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்துள்ளன என நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்டதால் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

தேர்தலுக்கு முன்பே இந்த 3 வழக்குகளிலும், அதற்கு முன்பு பல வழக்குகளிலும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் பாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com