இந்துக்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க கூடாது என நான் சொல்லவில்லை சித்தராமையா பேட்டி

இந்துக்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கூடாது என நான் சொல்லவில்லை என சித்த ராமையா கூறினார்.
இந்துக்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க கூடாது என நான் சொல்லவில்லை சித்தராமையா பேட்டி
Published on

மைசூரு,

முன்னாள் முதல்-மந்திரியும், தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூரு டவுன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்துக்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. மாறாக இந்து மதத்தின் பெயரில் வன்முறை மற்றும் கலவரத்தை தூண்டுபவர்களுக்குத்தான் பாரத ரத்னா விருது வழங்க வேண்டாம் என்று நான் கூறியிருக்கிறேன். வீர்சாவர்க்கர், மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர். அதனால்தான் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டாம் என்று கூறினேன்.

அவருக்கு பதிலாக கடந்த ஆண்டு மரணம் அடைந்த துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவக்குமாரசுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இதைத்தான் நான் வலியுறுத்தி வருகிறேன். இதே கருத்தை நான் மத்திய அரசிடமும் வலியுறுத்தி வருகிறேன். இந்துக்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க கூடாது என்று நான் சொல்லவில்லை. நானும் இந்து மதத்தை சேர்ந்தவன்தான். வீர்சாவர்க்கர் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியதால் பா.ஜனதாவினர் எனக்கு எதிராக பேசி வருகிறார்கள்.

மந்திரி சி.டி.ரவி என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நான் எப்போதும் உண்மையைத்தான் சொல்வேன். வீர்சாவர்க்கர் ஒரு மதவாதி. இந்து மதத்தை வளர்த்தவர் என்ற காரணத்திற்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. ஆனால் அவர் மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளி ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com