விளைபொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டால் தோட்டக்கலைத்துறையை தொடர்பு கொள்ளலாம் - கலெக்டர் அறிவிப்பு

விளைபொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டால் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
விளைபொருட்களை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டால் தோட்டக்கலைத்துறையை தொடர்பு கொள்ளலாம் - கலெக்டர் அறிவிப்பு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் அனைத்தையும் வியாபாரிகள் உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகிறார்கள். மாவட்டத்தில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை மூலமாக திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கேயம், பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது. இதிலும் உழவர்கள் தங்கள் விளை பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகள் பாதுகாத்து வைக்கும் வகையில் குளிர்பதன கிடங்குகள் இயங்கி வருகிறது. அதாவது அவினாசி, பல்லடம், உடுமலை, வெள்ளகோவில் பகுதிகளில் தலா 25 டன் கொள்ளளவும், பொங்கலூரில் 50 டன் கொள்ளளவும் கொண்ட குளிர்பதன கிடங்கு வசதி உள்ளது. இந்த குடோன்களில் விவசாயிகள் தங்கள் காய்கறி, பழங்களை வருகிற 30-ந் தேதி வரை இலவசமாக இருப்பு வைத்து விற்பனை செய்ய அரசு சலுகையை அறிவித்துள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனைசெய்வதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com