சென்னை குரோம்பேட்டையில் நவீன வசதிகளுடன் ரூ.61½ லட்சத்தில் பூங்கா விரைவில் திறக்கப்படும்
குரோம்பேட்டையில் நவீன வசதிகளுடன் ரூ.61 லட்சத்து 44 ஆயிரத்தில் அம்ருத் திட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள பூங்கா விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பல்லாவரம் நகராட்சி பொறியாளர் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 73 லட்சத்தில் 16 பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.