கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

செங்கல்பட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும், 4 பேரை பிடிக்க முயன்றபோது அவர்கள் போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடினார்கள்.
கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
Published on

செங்கல்பட்டு,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 29). தரமணியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சென்னை தியாகராயநகரை பகுதியை சேர்ந்தவர் மதன்(32). இவருடைய மனைவி ரேணுகாதேவி. ஹரிக்கும், ரேணுகாதேவிக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

இது ரேணுகாதேவியின் கணவர் மதனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நண்பர்களுடன் சேர்ந்து ஹரியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதனால் மதன், தனது நண்பர்களான ராமு(37) உள்ளிட்ட 4 பேருடன் சேர்ந்து ஆட்டோவில் தரமணியில் உள்ள ஹரியின் அலுவலகம் அருகே சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com