சென்னையை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 26), பெயிண்டர். இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் திடீரென ராஜேசை கண்டதும் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்க வந்தனர்.