

ஸ்ரீபெரும்புதூர்,
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 40). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி லாரியை ஓட்டி சென்றார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே சென்ற போது முன்னால் சென்ற ஜீப் மீது லாரி மோதியது.