தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைவது எங்கே? அதிகாரிகள் நேரில் ஆய்வு

தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எங்கே அமைப்பது? என்பது குறித்து அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைவது எங்கே? அதிகாரிகள் நேரில் ஆய்வு
Published on

தென்காசி,

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் சமீபத்தில் அறிவித்தார். இதன்பிறகு அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் தனி அதிகாரியாக அருண் சுந்தர் தயாளன் நியமனம் செய்யப்பட்டார். அவரது தலைமையில் பொதுமக்களிடம் நெல்லை மற்றும் குற்றாலத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com