சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
Published on

கிருஷ்ணகிரி,

வேலூர் மாவட்டம் பச்சூர் மாமுடிமானப்பள்ளியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சுரேஷ் (வயது 24). இவர் ஓசூரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் சித்தனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்தார். அவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் கடந்த 13.1.2018 அன்று நடந்தது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர். அவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி சிறுமியை கடத்திய குற்றத்திற்காக சுரேசிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும், போக்சோ பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com