

திருப்பூர்,
திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. அதிலும், குமரன்ரோடு, காமராஜர்ரோடு, பார்க்ரோடு, ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகள் எப்போது பரபரப்புடனேயே காணப்படும். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல ரெயில்வே மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது.
அப்போது புஷ்பா ரவுண்டானா பகுதியில் இருந்து மேம்பாலம் வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவர்மீது மோதியது. இதில், நிலை தடுமாறிய அந்த நபர் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.