

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அரசு உறுதியளித்தது.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கல்லூரி அமைக்க ரூ.321 கோடி மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.