இந்தியாவிலேயே தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

இந்தியாவிலேயே தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் வசதிகள் உள்ளது என்று சேலத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Published on

சேலம்,

சேலம் மாநகர காவல்துறை சார்பில் பள்ளிகளில் உள்ள சாலை பாதுகாப்பு ரோந்து குழுக்களுக்கு சீருடைகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் நேரு கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 2 ஆயிரத்து 369 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 81 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு ரோந்து சீருடைகள் மற்றும் உபகரணங்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசிய தாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அதிகளவில் இருப்பதால் அந்தந்த பகுதியில் வசிக்கும் மாணவ-மாணவிகள் மிக எளிதாக கல்வி கற்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவ செல்வங்கள் சிறந்த கல்வி கற்க வேண்டும் என்பதற்காக இலவசமாக காலணி, சீருடை, நோட்டு, புத்தகம், பேக், சைக்கிள் மற்றும் அறிவுபூர்வமான கல்வி கற்பதற்கு மடிக்கணினி, எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 படித்தால் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இன்றைக்கு கல்வித்தரம் உயர்ந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com