ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஈரோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Published on

ஈரோடு,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

விழாவில் மாவட்ட பொருளாளர் தரணி சண்முகம், மகளிர் அணி இணைச்செயலாளர் அமுதா, ஜெயலலிதா தொழிற்சங்கம் செயலாளர் மகேந்திர குமார், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் முகமதுராஜா, பாசறை செயலாளர் பெரியார்நகர் கண்ணன், சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ஒயிட்சாதிக், ஒன்றிய செயலாளர் பூபாலமுருகன், பகுதி செயலாளர்கள் அய்யாசாமி, அறிவழகன், நேரு உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை வீரப்பன்சத்திரம் பகுதி துணைச்செயலாளர் சக்திவேல் செய்திருந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com