

பாலுச்செட்டிச்சத்திரம்
காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் தலைமையில் போலீசார், காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் பைபாஸ் சாலை, திம்மசமுத்திரம், சிறுகாவேரிப்பாக்கம் போன்ற இடங்களில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக, வேலூர் மாவட்டத்தில் இருந்து மணல் கடத்தி வந்த 3 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து லாரி டிரைவரான காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை காவங்கரையை சேர்ந்த வெங்கடேசன் (23), வாலாஜா தாலுகாவை சேர்ந்த தினேஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.