

பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் காலியாக இருந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 11 தொகுதிகளில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ.க்களாகி உள்ளனர். அவர்களுக்கு மந்திரிபதவி வழங்கப் படும் என்று பா.ஜனதா கட்சி அறிவித்துள்ளது.