கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த தேர்தலில் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து பா.ஜனதா விலகியது.
கர்நாடக மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
Published on

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபையில் உறுப்பினர்களாக இருந்த பரமேஸ்வர், ஈசுவரப்பா, சோமண்ணா ஆகியோர், கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் தங்களின் எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் மேல்-சபையில் அந்த 3 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் மேல்-சபையில் காலியாக உள்ள அந்த 3 இடங்களுக்கு வருகிற 4-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலுக்கு நேற்று கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com