அடிப்படை வசதிகள் இல்லாத: ஆவடி மாநகராட்சி அலுவலகம் நடவடிக்கை எடுக்கக்கோரி - பொதுமக்கள் கோரிக்கை

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி செயல்பட்டு வருவதால், முறையாக பராமரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லாத: ஆவடி மாநகராட்சி அலுவலகம் நடவடிக்கை எடுக்கக்கோரி - பொதுமக்கள் கோரிக்கை
Published on

ஆவடி,

ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி சட்டசபையில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. தற்போது ஆவடி மாநகராட்சியாக செல்பட்டு வரும் நிலையில், 48 வார்டுகள் உள்ளன.

இந்த நிலையில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள தரைத்தளத்தில் சுகாதார பிரிவு, என்ஜினீயரிங் பிரிவு, வரிவசூல் மையம், ஆணையர் அறை உள்ளிட்ட ஏராளமான அறைகள் உள்ளன.

முதல் தளத்தில் நகரமைப்பு பிரிவு, வருவாய் பிரிவு, ஆதார் மற்றும் இ-சேவை மையம் ஆகியவை உள்ளன. இந்த அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு வரி செலுத்துவதற்காகவும், ஆதார் மற்றும் இ-சேவை மையத்திற்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com