

சென்னை,
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவரது மனைவி துர்கா, புதுப்பானையில் பொங்கலிட்டு, அனைவருக்கும் வழங்கினார். பின்னர் அப்பகுதி பெண்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை முன்னிறுத்தி போட்ட கோலங்களை மு.க.ஸ்டாலின், தனது மனைவியுடன் பார்வையிட்டார்.
விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கொளத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை, குறைகளை நேரடியாக வந்து சந்தித்துக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து வருகிறேன். என்னுடைய பொதுவாழ்வில் எத்தனையோ மறக்க முடியாத, நெஞ்சை விட்டு அகலாத நிகழ்வுகள் பல உண்டு.