200 மதுபாட்டில்கள் பறிமுதல்

200 மதுபாட்டில்கள் பறிமுதல்
200 மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

வையம்பட்டி, ஜன.27-
குடியரசு தினமான நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாக வையம்பட்டி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ஒத்தக்கடை பகுதியில் வேல்முருகன் (வயது 19) என்பவர் தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து 200 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com