

மாமல்லபுரம்,
உலக கடல்வழி பயண வழிகாட்டி தினத்தை முன்னிட்டு நேற்று அரசு பள்ளி மாணவர் களுக்கு மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டது. மாணவர்கள் பலர் ஆர்வமாக கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்த்தனர்.
மேலும் கலங்கரை விளக்க அலுவலர் வசந்த், பள்ளி மாணவர்களுக்கு தற்போது நவீன தொழில் நுட்பத்தில் தானியங்கி மூலம் செயல்படும் கலங்கரை விளக்கத்தின் செயல்பாடு குறித்து விளக்கி கூறினார்.
மேலும் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட மண்எண்ணெய் விளக்கு, அப்போது பயன்படுத்தப்பட்ட சுழலும் விளக்கு மற்றும் பயன்படுத்தப்பட்ட பழமை வாய்ந்த சாதனங்களை மாணவர்களுக்கு காண்பித்து விளக்கினார்.