

வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள வள்ளி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோ (வயது58), இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் இவர் நேற்றுமுன்தினம் மதியம் அவரது வீட்டிலிருந்து மொபட்டில் வெளியே சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த உறவினர்கள் இளங்கோவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.