

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர் உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், பறக்கும் படை தனிதாசில்தார் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் சலீம்பாட்ஷா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் குருபரப்பள்ளி - பங்காரப்பேட்டை சாலையில் உள்ள சிந்தகும்மனப்பள்ளி என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அதனை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3.25 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த அரிசி கர்நாடகாவிற்கு கடத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.