பொன்னேரி அருகே மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

பொன்னேரி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னேரி அருகே மதுக்கடை திறக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
Published on

பொன்னேரி,

பொன்னேரி அடுத்த சின்னகாவனம் கிராமத்தில் பெரும்பேடு செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பகுதியில் கோவில், பள்ளிக்கூடம், கடைவீதி ஆகியவை உள்ளன. இதனால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வைக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் இதனை மீறி கடந்த வாரம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com