டவுட்டன் பாலம் அருகே செல்போன் பறித்த வாலிபர் கைது

டவுட்டன் பாலம் அருகே செல்போன் பறித்த வாலிபர் கைது செய்தனர்.
டவுட்டன் பாலம் அருகே செல்போன் பறித்த வாலிபர் கைது
Published on

சென்னை,

சென்னை புரசைவாக்கம் பொன்னன் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 45). இவர், நேற்றுமுன்தினம் இரவு டவுட்டன் பாலம் சிக்னல் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ராமச்சந்திரனின் செல்போனை பறித்துவிட்டு தப்ப முயன்றனர்.

அதில் ஒருவர், பொதுமக்கள் பிடியில் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர் புளியந்தோப்பு கே.எம்.கார்டன் 10-வது தெருவை சேர்ந்த விஜய் (19) என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய நபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com