பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

ஊருக்குள் வரும் வியாபாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பணம் கேட்டு மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
Published on

சேலம்,

கெங்கவல்லி தாலுகா செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் மது குடித்துவிட்டு பொதுமக்களை தகாத வார்த்தையால் திட்டி வருகின்றனர். எங்கள் கிராமத்திற்குள் வந்து சென்ற தனியார் பஸ்சின் டிரைவர், கண்டக்டரை அவர்கள் தரக்குறைவாக பேசியதால் கடந்த 2 மாதங்களாக அந்த பஸ் ஊருக்குள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com